தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி செய்திகள் பேரழிவை உருவாக்கும்: துணை ஜனாதிபதி கவலை

புதுடெல்லி: போலி செய்திகள் பேரழிவை உருவாக்கும் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலையுடன் தெரிவித்தார்.
Advertisement

டெல்லியில் நடந்த இந்திய தகவல் சேவை அதிகாரி பயிற்சியாளர்கள் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசுகையில், ‘தகவல் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம்;

போரின் ஐந்தாவது பரிமாணம். நம்முடைய தகவல்கள் பொதுவெளியில் சிலரால் கையாளப்படும் போது, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. தவறான தகவல்களை தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நிறுவனங்களின் தனியுரிமை மற்றும் நற்பெயரைக் காப்பாற்றவும் அதிகாரிகள் விரைவாக செயல்பட வேண்டும். கட்டுப்பாடற்ற தகவல்கள், போலி செய்திகளால் அரசு நிறுவனங்களை கறைப்படுத்தவும், களங்கப்படுத்தவும், அதன் மீதான மதிப்பை குறைக்கவும், இழிவுபடுத்தவும் முடிகிறது.

கற்பனைக்கு எட்டாத பேரழிவை கூட போலி செய்திகள் உருவாக்கும். இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி குறித்த தகவல்களை உலகளவில் பரப்ப வேண்டும். உலகெங்கிலும் ‘பிராண்ட் இந்தியா’வை விளம்பரப்படுத்த வேண்டும். வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் தகவல் சேவை பிரிவினர் நன்றாக பணியாற்றினர்’ என்றார்.

Advertisement