தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள்... குடிமக்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!

டெல்லி : சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து குடிமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், "போலியான முதலீட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் ஆன்லைன் சதித்திட்டங்களுக்கு போலி விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில், பயனர்களைத் தவறாக வழிநடத்த டீப்ஃபேக் வீடியோக்களும் உபயோகிக்கப்படுகின்றன. இந்த மோசடிகளால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்துள்ளனர். கண்ணைக் கவரும் காட்சிகள், தவறான வாக்குறுதிகள் மற்றும் தொழில்முறைத் தோற்றமுடைய ஆன்லைன் பக்கங்களால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement

எனவே சமூக ஊடகங்களில் பரவும் தேவையற்ற முதலீட்டுத் திட்டங்கள், கேஷ்பேக் சலுகைகள் அல்லது பகுதிநேர வேலை செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாடும் உடனடியாக தேசிய சைபர் கிரைம் புகாரளிப்பு போர்டல் (www.cybercrime.gov.in) மூலம் அல்லது 1930 ஹெல்ப்லைன் மூலம் புகாரளிக்கப்பட வேண்டும். இந்த ஹெல்ப்லைன் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணிசமான தொகையை மீட்டெடுக்க உதவியுள்ளது. மேலும், எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க, CYBERDOST என்ற அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கை அனைத்து முன்னணி சமூக ஊடக தளங்களிலும் பின் தொடர வேண்டும், "இவ்வாறு உள்துறை அமைச்சகம் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Related News