தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்குறிச்சி அருகே கோழியை நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றபோது குறி தவறியதால் இளைஞர் பலி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கோழியை நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றபோது குறி தவறியதால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ளது மேல் மதூர் கிராமம். இந்த கிராமத்தில் அண்ணாமலை என்பவர் நேற்று இரவு அவரது வீட்டில் மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வீட்டில் வளர்த்து வந்த கோழியை சுட்டுள்ளார்.

Advertisement

அப்போது, துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டானது குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் என்பவரின் தலையில் பாய்ந்தது. இதில், பிரகாஷ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கரியாலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து சென்ற காவல்துறையினர் பிரகாஷின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வராயன் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியின் மூலம் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News