தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேல்மலையனூர் சுற்றியுள்ள கிராமங்களில் போலி எலும்பு முறிவு மருத்துவர்கள் அதிகரிப்பு

*விழுப்புரம் ஆட்சியரிடம் புகார் மனு

Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் போலி எலும்பு முறிவு மருத்துவர்கள் அதிகரித்துள்ளதால் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சித்தேரியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, சித்தேரி கிராமத்தில் எலும்பு முறிவு மருத்துவர்கள் என்று சித்தேரி, கெங்கபுரம், தேவனூர், வளத்தி போன்ற பல இடங்களில் பெயர் பலகை வைத்து போலியான மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர். போலியாக எலும்பு முறிவு வைத்தியம் பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலர் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்டபோது சுகாதாரத்துறை இந்த பகுதியில் பதிவு பெற்ற மருத்துவர்கள் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது போலியான மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலியாக எலும்பு முறிவு வைத்தியம் பார்த்து சட்டவிரோதமாக இந்த மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News