தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி போலீஸ் பணிக்கு தேர்வெழுதிய 22 பேர் மீது வழக்கு பதிவு: மத்திய பிரதேச போலீஸ் நடவடிக்கை

போபால்: போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி போலீஸ் பணிக்கு தேர்வெழுதிய 22 பேர் மீது வழக்கு பதிந்து மத்திய பிரதேச போலீஸ் விசாரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த காவலர் பணிக்கான தேர்வுகளில் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்திய பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு, மத்தியப் பிரதேச பணியாளர் தேர்வு வாரியம், காவலர் பணியிடங்களுக்காக ஆன்லைன் தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024ம் ஆண்டில் உடற்தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
Advertisement

இந்தத் தேர்வுகளின் போது, ஐந்து தேர்வர்கள் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வில் பங்கேற்றதை தேர்வுக் குழு கண்டறிந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற ஆதார் அட்டை முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22 தேர்வர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஐ.ஜி. அன்ஷுமன் சிங் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், தேர்வர்களின் அடையாளத்தை முழுமையாகச் சரிபார்க்காமல், ஆதார் அட்டைகளில் திருத்தங்களைச் செய்த விற்பனையாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது; எனவே அவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ‘தகுதியான தேர்வர்களுக்கு அநீதி இழைக்கும் இதுபோன்ற குற்றச் செயல்கள் மத்தியப் பிரதேசத்தில் பொறுத்துக்கொள்ளப்படாது.

மேலும், வெற்றி பெற்ற அனைத்து தேர்வர்களின் பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் ஆதார் வரலாறு ஆகியவற்றை காவல் தலைமையகம் முழுமையாக ஆய்வு செய்து வருகிறது. முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை உறுதி செய்யப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement