தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நியாயமான கட்டணம், இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வரையில் தனியார் பல்கலை சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற கூடாது: தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தனியார் கல்லூரிகளும், அரசு உதவி பெறும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும். ஏற்கனவே தாங்கள் விரும்பிய கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிகள் பல மடங்கு கட்டணங்களை உயர்த்தும் சூழல் உருவாகும்.

Advertisement

மேலும் கல்வியின் தரத்தையும், அனைவருக்குமான இடஒதுக்கீட்டையும் உறுதி செய்ய வேண்டிய அரசு தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிப்பது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதகமாக அமையும். ஆகவே நியாயமான கட்டணத்தையும், கல்வித் தரத்தையும் அனைவருக்குமான இடஒதுக்கீட்டையும் உறுதி செய்யும் வகையிலான திருத்தங்களை இந்த சட்டத்தில் கொண்டு வரும் வரை இந்த சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்ற கூடாது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘பாகிஸ்தானை உருவாக்கிய இந்தியாவுக்கு அதை இவ்வாறும் செய்ய முடியும்’’ என சங்கேத மொழியில் பேசி உள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அதே போன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார், தேவையற்ற சண்டைக்கு அண்டை நாடுகளை அழைப்பது பீஹார் தேர்தலுக்காக செய்யப்படும் உள்ளடி வேலையாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News