தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோதனை மேல் சோதனை; தொடர் தோல்வியால் அங்கீகாரம் இழந்த பாமக: பாஜ கூட்டணியில் 6 தொகுதிகளில் டெபாசிட் காலி

சென்னை: பாமகவின் தொடர் தோல்வி காரணமாக அக்கட்சி மாநில அந்தஸ்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்று நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. அக்கட்சியின் சார்பில் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார். அதன்படி, தேர்தல் முடிவில் ஒட்டுமொத்தமாக அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி, 10 தொகுதிகளிலும் 18.79 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றனர். குறிப்பாக, 6 தொகுதிகளில் டெபாசிட் கிடைக்காமல் போனது. இதன் காரணமாக பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது.
Advertisement

குறிப்பாக, இந்த தேர்தலில் 4.23% வாக்குமட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ளது. தமிழகத்தில் வடமாவட்டத்தை குறித்து வைத்து கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை 7 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 2004ம் ஆண்டு நடந்த 14வது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இதன் காரணமாக அப்போது அக்கட்சியின் வாக்கு சதவீதம் 6.71 ஆக இருந்தது. அதன் பின்னர் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்வியை மட்டுமே பாமக சந்தித்து வருகின்றன. இதேபோல், இம்முறை நடந்த தேர்தலிலும் 8 சதவீதத்தை எட்ட முடியாமலும், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News