தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வசதி படைத்தவர்களுக்கு தலித் இட ஒதுக்கீடு தரக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

அமராவதி: ஆந்திரா, அமராவதியில் 75 வயதில் இந்தியாவும், வாழும் இந்திய அரசியலமைப்பும் என்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பேசுகையில்,‘‘ இட ஒதுக்கீடு என்று வரும் போது ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தைகளை ஏழை விவசாய தொழிலாளியின் சந்ததியினருடன் ஒப்பிடக்கூடாது. கடந்த 1992ல் இந்திரா சாஹனி வழக்கில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வசதி படைத்தவர்களை(கிரீமி லேயர்) அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிக்கிறேன்.

Advertisement

அதே கிரீமீ லேயர் நடைமுறை தலித் இடஒதுக்கீட்டுக்கும் பொருந்த வேண்டும் என்ற கருத்தை கூறினேன். இருப்பினும் அந்த பிரச்னையில் எனது தீர்ப்பு பரவலாக விமர்சிக்கப்பட்டது. நீதிபதிகள் வழக்கமாக தங்கள் தீர்ப்புகளை நியாயப்படுத்தக் கூடாது என்று நான் இன்னும் கருதுகிறேன், மேலும் எனக்கு ஓய்வு பெற இன்னும் ஒரு வாரம் உள்ளது. ஓரிரு நாட்களில் தலைமை நீதிபதியாக பயணத்தை முடிக்கத் தயாராக இருப்பதற்கு முன்பு, நான் கலந்து கொண்ட கடைசி விழா ஆந்திராவின் அமராவதியில் நடந்தது.

தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு கலந்து கொண்ட முதல் விழா மகாராஷ்டிராவில் உள்ள என் சொந்த ஊரான அமராவதியில் நடந்தது’’ என்று கூறினார். 2024ம் ஆண்டு நீதிபதி கவாய் பேசுகையில், மாநிலங்கள் தலித்து மற்றும் பட்டியல் பழங்குடியினர் மத்தியிலும் கிரீமி லேயரை அடையாளம் காண ஒரு கொள்கையை உருவாக்கி, அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலனை மறுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Related News