தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து அதிக லாபம் ஆசை காட்டி பல லட்சம் ரூபாய் மோசடி: கோவை வாலிபர் கைது

அண்ணாநகர்: பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து தனியார் கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என லட்சம் மோசடி செய்த கோவை வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் காவல்நிலையங்களில் 31 வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (38). அதே பகுதியில் தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவர், கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அண்ணாநகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனியார் கம்பெனியில் முதலீடு செய்து அதிக வருமானம் சம்பாதிக்கலாம் என பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதில் ஒரு லிங்கை தொட்டபோது தானாக வாட்ஸ்அப் குழுவில் என்னுடைய செல்போன் நம்பர் பதிவானது.

Advertisement

வாட்ஸ்அப் குழுவில் தனியார் கம்பெனியில் முதலீடு செய்து எப்படி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி எனது வங்கி கணக்கு மற்றும் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை தனியார் கம்பெனியில் முதலீடு செய்தேன். அதன்பிறகு வாட்ஸ்அப் குழு தானாகவே டெலிட் ஆகிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து பேஸ்புக் மூலம் ஆராய்ந்தபோது மோசடி கும்பலின் வேலை என்பது தெரிந்தது. எனவே, என்னுடைய பணத்தை மோசடி செய்து ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதரவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜிம் நடத்தி வந்தவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்காக காவல்நிலையம் வரும்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் சந்தேகம் வழுத்து அண்ணாநகர் போலீசார், கோயம்புத்தூரில் உள்ள ஜிம்முக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஜிம்மை வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து அவரது செல்போன் டவர் மூலம் தொடர்ந்து கண்காணித்தபோது, பெங்களூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அண்ணாநகர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையிலான போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். நேற்று அவரை அண்ணாநகர் காவல் நிலையம் கொண்டுவந்து நடத்திய விசாரணையில், கோவையை சேர்ந்த ஷாருக் (30) என்பதும், இந்தியா முழுவதும் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பேஸ்புக் மூலம் 31க்கும் மேற்பட்ட பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஷாருக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News