தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு நீட்டிப்பு: மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்

 

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு நீட்டிக்கப்படுகிறது என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. அதை தொடர்ந்து மாணவர்கள் நேற்று மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் நாளை வரை மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு நீட்டிக்கப்படுகிறது.

மாணவர்கள் நாளை காலை 11 மணி வரை விருப்பமான கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அதனை தொடர்ந்து 7ம் தேதி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 8ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் இட ஒதுக்கீட்டு ஆணையை ஆகஸ்ட் 8ம் முதல் 13ம் தேதி நண்பகல் 12.00 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசு நிர்ணயம் செய்து கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.