தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண் சித்ரவதை: கணவன், மாமனார், மந்திரவாதி கைது

 

Advertisement

திருவனந்தபுரம்: பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண்ணை 10 மணி நேரத்திற்கு மேல் அறையில் பூட்டிப்போட்டு உடலில் சூடு வைத்தும், மது, பீடி குடிக்க வைத்து அடித்தும் கொடுமைப்படுத்திய சம்பவத்தில் கணவன், மாமனார் மற்றும் மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (58). இவரது மகன் அகில் (26). கூலித்தொழிலாளியான அகிலுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இவரது மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி கணவன் வீட்டினர் அப்பகுதியை சேர்ந்த சிவதாஸ் என்ற மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். இளம்பெண்ணின் உடலில் கெட்ட ஆத்மாக்கள் புகுந்துள்ளதாகவும், அதை விரட்டுவதற்கு வீட்டில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்றும் மந்திரவாதி கூறியுள்ளார்.இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் அகிலின் வீட்டில் வைத்து பூஜை நடத்தப்பட்டது. அப்போது அந்த இளம்பெண்ணை 10 மணி நேரத்திற்கு மேல் அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

மேலும் மது, பீடி குடிக்க வைத்தும், உடலில் சூடு போட்டும், அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் திருவஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தாஸ், அகில் மற்றும் மந்திரவாதி சிவதாஸ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அகிலின் தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement

Related News