தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வணிகர் சங்க நிர்வாகி வீட்டில் ரூ.3.25 கோடி பறிமுதல்

கூடலூர்: கூடாலூரி வணிகர் சங்க நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ₹3.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடலூரை அடுத்துள்ள மதுரை ஊராட்சிக்குட்பட்ட கம்மாத்தி பகுதியில் வசிப்பவர் தொம்மி (எ) ஏ.ஜே.தாமஸ். வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்.  மதுரை ஊராட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.
Advertisement

விவசாய தொழில் மற்றும் வியாபாரம் உள்ளிட்டவை செய்து வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 12 மணியளவில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்குப் பின் 3 அதிகாரிகள் சில ஆவணங்களை அங்கிருந்து காரில் எடுத்து சென்றனர். தாமசின் மகன் சிரில் என்பவரை காரில் அழைத்து வெளியே சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அதிகாரிகள் கூடலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அவரது வங்கிக் கணக்குகள் குறித்து விபரம் சேகரித்து உள்ளனர். தாமசின் ஹார்டுவேர் நிறுவனத்தில் கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.

இந்தநிலையில் மீண்டும் நேற்று காலை தொடங்கி சோதனை மாலை 4 மணி வரை நடந்தது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் அடங்கிய சிறிய பைகள் மற்றும் கணக்கில் வராத ₹3.25 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாமஸிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘வியாபாரம், நில ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு சம்பந்தமான ஆவணங்களை கொண்டு சென்றதாகவும், பணம் எதுவும் தனது வீட்டில் இருந்து அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை,’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News