தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிதம்பரம் காவலர்களின் குழந்தைகள் பிச்சாவரத்தில் உற்சாக படகு சவாரி

சிதம்பரம்: சிதம்பரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 80 குழந்தைகளை பிச்சாவரத்திற்கு அழைத்துச்ெசன்ற இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், குழந்தைகளுடன் படகு சவாரி செய்து சுரபுன்னை காடுகளின் பயன்களை விளக்கினார். இதனால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் ஏராளமான போலீசார் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள போலீசார் பணிச்சுமை காரணமாக தங்கள் குழந்தைகளை பூங்கா, கடற்கரை, ஷாப்பிங் என அழைத்துச்செல்வது குறைந்து வருகிறது.

இதனால் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குழந்தைகள் சுமார் 80 பேரை அண்ணாமலை நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் நேற்று, பிச்சாவரம் அழைத்துச் சென்றார். பிச்சாவரத்தில் இயற்கையின் அதிசயமாக விளங்கும் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள சுரபுன்னை காடுகள், அவை வளரும் விதம், கடல் அரிப்பை எவ்வாறு இந்த சுரபுன்னை காடுகள் தடுக்கிறது? மற்றும் அதன் முக்கியத்துவம், பயன்கள் குறித்து வனத்துறை காவலர் முத்துக்குமார் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினார்.

பின்னர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், குழந்தைகளை படகு சவாரிக்கு அழைத்துச் சென்றார். அப்போது பிச்சாவரம் சதுப்பு நில காடுகளின் இயற்கை அழகை ரசித்தவாறே குழந்தைகள் படகு சவாரி செய்தனர். படகு சவாரி முடிந்ததும் மீண்டும் பேருந்து மூலம் குழந்தைகளை அழைத்து வந்து காவலர் குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் விட்டார். அவரது இந்த செயலால் காவலர்களின் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்ததோடு, பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.