தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவாகரத்து பெற்றாலும் மகளை பார்க்க உரிமை; ஐகோர்ட் அனுமதியுடன் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடிய தந்தை: நீதிமன்ற வளாகத்தில் கேக் வெட்டி உற்சாகம்

Advertisement

சென்னை: சென்னையைச் சேர்ந்தவர்கள் பிரேம்- மாலா. இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் மகள் உள்ளார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அப்போது, மாதம் முதல் மற்றும் 3ம் சனிக்கிழமைகளில் பிரேம் தனது மகளை பார்க்கலாம் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஆனால், மகளை பார்க்க மாலா அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேம் சார்பில் ஆஜரான வக்கீல் டி.பிரசன்னா, குழந்தைக்கு ஜூன் 25ம் தேதி பிறந்தநாள்.

அப்போது மகளை பார்க்கவும், பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் பிரேமுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த 4 வயது மகள் பிறந்தநாளை குடும்பநல நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து கொண்டாடலாம். பின்னர், அதுகுறித்து 26ம் தேதி (இன்று) அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோருடன் தனது 4 வயது மகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாளை பிரேம் கொண்டாடினார்.

Advertisement

Related News