தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாம் பழங்குடியினருக்கு விதிவிலக்கு: 2 குழந்தைகள் கொள்கையில் தளர்வு

 

Advertisement

திஸ்பூர்: அசாமில் பழங்குடியினர் உள்ளிட்ட குறிப்பிட்ட சமூகங்களுக்கு இரண்டு குழந்தைகள் கொள்கையில் இருந்து விலக்கு அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அசாமில் கடந்த 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருப்பவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது என்ற விதிமுறை அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்தக் கொள்கையில் தற்போது முக்கிய தளர்வு ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பழங்குடியினர், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மோரன், மொட்டாக் ஆகிய பூர்வகுடி சமூகங்களுக்கு இரண்டு குழந்தைகள் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் அரசு வேலை மற்றும் தேர்தல் ஆகியவற்றில் எவ்வித தடையுமின்றி பங்கேற்கலாம். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில், ‘பழங்குடியினர், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மோரன் மற்றும் மொட்டாக் சமூகத்தினரைப் பொறுத்தவரை, இரண்டு குழந்தைகள் என்ற விதிமுறையை தளர்த்துகிறோம். ஏனெனில், அவர்கள் மிகச் சிறிய சமூகங்கள். அவர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால், அடுத்த 50 ஆண்டுகளில் அந்த சமூகங்களே இல்லாமல் போகக்கூடும். மேலும், 1983ம் ஆண்டு நெல்லி படுகொலை சம்பவம் தொடர்பான திவாரி ஆணையத்தின் அறிக்கை, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பொதுமக்களின் பார்வைக்காக அவையில் தாக்கல் செய்யப்படும்’ என்றும் அவர் அறிவித்தார்.

Advertisement

Related News