தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யுரோ கோப்பை கால்பந்து: ஜெர்மனி கோல் மழை

Advertisement

மியூனிக்: ஐரோப்பிய நாடுகளுக்கு இ டையிலான ‘யுரோ கோப்பை கால்பந்து’ போட்டி நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஜெர்மனி-ஸ்காட்லாந்து அணிகள் களம் கண்டன. ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் ஆரம்பம் முதலே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. அதன் விளைவாக ஜெர்மனியின் ரிட்ஸ் 10வது நிமிடத்திலும், முசியலா 19வது நிமிடத்திலும் கோலடித்து அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தனர். முதல் பாதியின் 44வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் ஆடிய ஸ்காட்லாந்து வீரர் போர்டிவுஸ், சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஸ்காட்லாந்து 10வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதியின் கூடுதல் நேரத்தில்(45 1) கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை ஹவெர்ட்ஸ் சரியாக பயன்படுத்தி கோலடித்தார்.

எனவே முதல் பாதியின் முடிவில் ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து 2வது பாதியின் 68வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃபுல்க்ரக் மேலும் ஒரு கோலடித்தார். ஸ்காட்லாந்து வீரர்கள் கடுமையாக போராடியும் பந்தை கைப்பற்றவே சிரமப்பட்டனர். அதனால் அவர்களின் கோலடிக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை. எனினும் அவர்களுக்கான கோலையும் ஜெர்மனி வீரர்களே அடித்தனர். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரர்களின் கோலடிக்கும் முயற்சியை தடுத்த ஜெர்மனி வீரர் ரூடிகர் மீது பட்ட பந்து சுயகோலானது. ஆட்டத்தின் முடிவில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில்(90 3) ஜெர்மனி வீரர் கேன் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 5-1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது. முதல் வெற்றியை பதிவு செய்த ஜெர்மனியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜமால் முசியலா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

Advertisement