தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்

புதுடெல்லி: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி குடியரசு தலைவர் உரையில் எதுவும் இடம்பெறாதது வேதனை தருவதாக மணிப்பூர் மக்களவை உறுப்பினர் பிமோல் கூறியுள்ளார். பாஜ ஆட்சி செய்யும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடைய நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஓராண்டை கடந்த பிறகும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இன்னர் மணிப்பூரில் பாஜ வேட்பாளர் தவ்னோஜாம் பசந்த் குமார் சிங் போட்டியிட்டார். இன்னர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் 3,74,017 வாக்குகள் பெற்று, 1,09,801 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவின் தவ்னோஜாம் பசந்த் குமார் சிங்கை தோற்கடித்தார்.
Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களவையில் இன்னர் மணிப்பூர் மக்களவை உறுப்பினர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் பங்கேற்று பேசினார். அப்போது, “மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிறது. கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். 60,000க்கும் மேற்பட்டோர் வீடற்று அகதிகளாக உள்ளனர். ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு தங்கள் கிராமத்தை தாங்களே காப்பாற்றுகின்றனர். மாநிலம் முழுவதும் ஆயுதமேந்திய நபர்கள் சுற்றி திரிகின்றனர். உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. ஆனால் மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி இன்னும் எதையும் பேசாமல் மவுனமாக இருக்கிறார். நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் கூட மணிப்பூர் கலவரம் பற்றி எந்த குறிப்பும் இடம்பெறாதது வேதனை தருகிறது” என்று தெரிவித்தார்.

Advertisement

Related News