தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழங்குடியின மாணவி கூட்டு பலாத்காரம்; வங்கதேசத்தில் வெடித்தது இனக்கலவரம்: 3 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு அமல்

டாக்கா: வங்கதேசத்தில் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூண்ட இனக்கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு மலைப்பகுதியான சிட்டகாங் பகுதியில், பூர்வகுடி பழங்குடியினருக்கும், வங்காள மொழி பேசும் மக்களுக்கும் இடையே நீண்டகாலமாக இனப் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 23ம் தேதி காக்ராச்சாரி மாவட்டத்தில் 8ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், தற்போது பெரும் இனக்கலவரமாக வெடித்துள்ளது. நேற்று முன்தினம் காக்ராச்சாரி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கடைகள், வீடுகள் எனப் பரவலாக தீ வைக்கப்பட்டதால் பெரும் வன்முறை மூண்டது. இந்த மோதல்களில் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 ராணுவ வீரர்கள், 3 காவலர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். பதற்றம் நிறைந்த காக்ராச்சாரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ‘பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும், சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ எனக் கோரி பழங்குடியின மாணவர் அமைப்பான ‘ஜும்மா சத்ர ஜனதா’ காலவரையற்ற சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளையும் முழுமையாக முடக்கியுள்ளது.

Advertisement

Related News