தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் மேகம்: இந்திய வான்வெளியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு

எத்தியோப்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் ஹெய்லி குப்பி எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மேகம் திங்கட்கிழமை காலை 5 மணி அளவில் வானில் பரவி பல்வேறு நாடுகளை நோக்கி நகர்ந்தது. இரவு 11 மணியளவில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளை கடந்தது. பின்னர், ராஜஸ்தான், குஜராத், மஹராஷ்டிரா, டெல்லி மற்றும் பஞ்சாப் முழுவதும் பரவியது.

Advertisement

சாம்பல் மேகம் 10 கிலோ மீட்டர் உயரத்துக்கும் மேல் இருந்ததால் டெல்லி போன்ற நகரங்களின் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிகழ்வின் தாக்கம் சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் மேகம் விரைவாக கீழே நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத் துறையின் இயக்குனரகம் விமானிகளுக்கு அவசர ஆலோசனை பிறப்பித்தது. எரிமலை சாம்பல் கண்ணாடி போல கூர்மையான சிலிகேட் துகள்களை கொண்டது என விமானிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது என்ஜினுக்குள் போனால் உள்ளிருக்கும் உதிரி பாகங்களை சிதைத்து சில சமயம் எஞ்சினையே அனைத்து விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சாம்பல் பரவி இருக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட உயரங்கள் வரை விலகி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement