தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள டார்கெட் என்ற கடைக்கு வெளியே பிற்பகல் 2:15 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத 32 வயதுடைய மர்ம நபர் வாகன நிறுத்தும் இடத்தில் நின்றிருந்த வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாக்குதலுக்குப் பிறகு அந்த நபர் திருடப்பட்ட காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்த நிலையில், அங்கு மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, மேலும் எந்த நோக்கமும் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும், மர்ம நபரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related News