தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போதைப் பொருள் வழக்கில் கைதான கணவரை ஸ்டேஷனில் இருந்து தப்ப வைத்த மனைவி: கேரளாவில் பரபரப்பு

 

திருவனந்தபுரம்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் இருந்து மனைவி தப்ப வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜு மன்சூர். நேற்று அவரை போலீசார் ஒரு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து அஜு மன்சூரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கூறிச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறை ஜன்னல் வழியாக ஏறி அங்கிருந்து தப்பினார்.

இந்த சமயத்தில் வெளியே ஸ்கூட்டரில் அவரது மனைவி பின்ஷி காத்திருந்தார். போலீஸ் நிலையத்தின் பின்புறம் வழியாக வந்த அஜு மன்சூர் மனைவியின் ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த விவரம் எதுவுமே போலீசாருக்கு தெரியாது. சிறிது நேரம் கழித்துத் தான் கழிப்பறைக்கு சென்ற அஜு மன்சூர் திரும்பி வரவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சென்று பார்த்தபோது கழிப்பறை காலியாக இருந்தது. அப்போதுதான் அஜு மன்சூர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் என்ற விவரம் போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து அஜு மன்சூரையும், அவர் தப்பிக்க உதவிய மனைவி பின்ஷியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related News