தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்: மாநகராட்சி நிர்வாகம் பிடிக்க வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கும்பலாக வலம் வரும் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், மாவட்ட விளையாட்டு மைதானம், அரசு அருங்காட்சியகம், பூங்கா, சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இதனால், அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், வ.உ.சி. பூங்கா வளாகத்தில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. ஒரு சில நேரங்களில் மார்க்கெட்டிற்கு காய்றி வாங்க வருபவர்களை துரத்துவதும், கடிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

Advertisement

இதேபோன்று, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருவதால், மாவட்டம் முழுவதும் இருந்து தினசரி 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். அவர்களை தெருநாய்கள் கடிக்க விரட்டுவதால், விளையாட வருபவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களையும் தெருநாய்கள் துரத்துவதால், அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக, வ.உ.சி பூங்காவில் வலம் வரும் தெருநாய்களை பிடிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement