ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்
Advertisement
இது 67.97 சதவீதம் ஆகும். வாக்குபதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள ‘ஸ்ட்ராங் ரூமில்’ வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. இன்று (8ம் தேதி) காலை 7.45 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, 14 மேஜைகளில் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையானது 16 சுற்றுகள் முதல் 17 சுற்றுகள் வரை நடைபெற உள்ளது. முன்னணி நிலவரம் காலை 9 மணி முதல் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வாக்கு எண்ணிக்கையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement