தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கு உட்பட்ட மூலப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று காலை 9 மணி அளவில் பள்ளியின் இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. இதை அடுத்து தகவலின் அடிப்படையில் பள்ளியின் முதல்வர் உடனடியாக மாவட்ட காவல் கணிக்கணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
Advertisement

தகவலின் பேரில் எஸ்.பி ஜவகர் உத்தரவின் பேரில் உடனடியாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஏ.டி.எஸ்.பி விவேகானந்தன் மற்றும் டி.எஸ்.பி முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மூலம் பள்ளிக்கு விரைந்தனர். தொடர்ந்து பள்ளியில் வெடிகுண்டு பொருட்கள் உள்ளனவா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு முன்பாக இச்சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளியில் படிக்கும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.

குறிப்பாக இச்சம்பவம் கடந்த 29ம் தேதி இதே காவல் நிலையத்திற்கு உட்பட்ட மற்றொரு பகுதியில் பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளியிலும் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 8 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக வெடிகுண்டு இல்லை எனவும், இத் தகவல் வதந்தி என்றும் தெரியவந்தது.

இருப்பினும் இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த வெடிகுண்டு தகவல் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் 2வது முறையாக ஈரோட்டில் நிகழ்ந்திருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News