தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே பயங்கரம் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை

*மது போதையில் வெறிச்செயல்:3 பேரிடம் தீவிர விசாரணை

Advertisement

ஈரோடு : ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே மது போதையில் குடியாத்தம் வாலிபரை சாக்கடையில் தள்ளி விட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் முன்புறம் சத்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை அருகே உள்ள சாக்கடையில் வாலிபர் ஒருவர் ரத்தக்காயத்துடன் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், இறந்த நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (40) என்பதும், அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில், நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அங்கிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு ஓடிச் செல்வதும், வருவதுமாக இருந்தது பதிவாகியிருந்தது.

கொலை சம்பவம் தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சுகீர்த்தன் (21), முகேஷ் (22),செல்வராஜ் ஆகிய 3 பேரை ஈரோடு டவுன் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மது போதையில் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

Advertisement