தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுச்சூழல் ஒப்புதலின்றி ஓராண்டு வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் 100% தொகையை குவாரி உரிமையாளர் தர வேண்டும் என்ற அரசு உத்தரவு உறுதி: ஐகோர்ட் உத்தரவு

Advertisement

சென்னை: கல்குவாரி உரிமைதாரர்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் 2016 முதல் 2017ம் ஆண்டு வரையிலான ஓராண்டு காலத்தில் வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து குவாரி உரிமம் பெற்றிருந்த 82 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என கூறியுள்ள நிலையில், ஒப்புதல் இல்லாமல் கல் குவாரி செய்தது சட்ட விரோதம்.

வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தும்படி அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குவாரி உரிமைதாரர்கள் ஏற்கனவே செலுத்தியுள்ள கட்டணத்தை கழித்து விட்டு மீதத் தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மூன்று வாரங்களில் அரசு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் கடிதம் கிடைத்த இரண்டு மாதங்களில் இழப்பீட்டுத் தொகையை மனுதாரர்கள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.

Advertisement