தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பால் வியாபாரி

மண்டபம்: மண்டபத்தில் வசிக்கும் பால் வியாபாரி ஒருவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், இயற்கையான பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறார். நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது. சதுர்த்தி விழா முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். எனவே, சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான பொருட்களை கொண்டு மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே கேட் பகுதியில் வசித்து வருபவர் சண்முகநாதன். இவர் பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீர்நிலைகள், இயற்கை சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை கருத்தில்கொண்டு பல்வேறு மரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பசை பொடி, கஸ்தூரி மஞ்சள், பசு மாடுகளின் சாணம், ஹோமியம் ஆகியவை மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறேன். விநாயகர் சதூர்த்தி விழாவிற்குள் 500 சிலைகளை தயாரிக்க தீர்மானித்துள்ளேன். விநாயகர் சிலைகள் அதன் அளவுக்கேற்ப ரூ.100 முதல் ரூ.300 வரை விற்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.