தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு: ஒன்றிய கல்வித்துறையின் 9 பேர் குழு பரிந்துரை

டெல்லி: தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்தவும் ஒன்றிய குழு பரிந்துரைத்துள்ளது. உயர்கல்விக்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்காக பயிற்சி பயன்களை மாணவர்கள் நாடுவதை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய மத்திய கல்வித்துறை சார்பில் 9 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையில் தனியார் பயிற்சி மையங்களின் விளம்பரங்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களை தவறாக வழிநடத்துவதால் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

10 மற்றும் 11ம் வகுப்புக்கான படத்திட்டங்களுக்கு இடையே உள்ள இடைவெளி தான் மாணவர்களுக்கு மன அழுத்தம் தருவதாகவும், நுழைவுத் தேர்வுக்கு ஆயத்தமாவதை தவிர்க்க செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பள்ளி பாடத்திட்டத்திற்கும், நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் உள்ள இடைவெளியே பயிற்சி மையங்கள் தங்கள் சுரண்டலுக்கு பயன்படுத்துவதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. OMR எனப்படும் குறியீட்டு பதில் அளிக்கும் முறையான கேள்வி தாள்களை பள்ளி தேர்வுகளில் வழங்குவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் நுழைவுத் தேர்வு எழுதுவதில் தயக்கம் அல்லது வேறுபான்மையை தவிர்க்க முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் கால இடைவெளியை குறைப்பதுடன், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

Advertisement