தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் செய்யும் போது கேளிக்கை கட்டணம் வசூலிக்கலாம்: மும்பை ஐகோர்ட் அனுமதி

Advertisement

மும்பை: ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கேளிக்கை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவை ரத்து செய்து மும்பை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில், திரையரங்குகள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்கள் ஆகியன, ‘ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ‘கேளிக்கை கட்டணம்’ (ெபாழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக விதிக்கப்படும் வரி) வசூலிக்கக் கூடாது’ என மாநில அரசு இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. மகாராஷ்டிர கேளிக்கை வரிச் சட்டம், 1923-ன் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு ஆன்லைன் டிக்கெட்டுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. இந்த உத்தரவு, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ‘புக் மை ஷோ’ போன்ற ஆன்லைன் தளங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், மாநில அரசின் இந்த உத்தரவுகளை எதிர்த்து பிவிஆர், பிக்கி-மல்டிபிளக்ஸ் சங்கம் மற்றும் புக் மை ஷோ நிறுவனம் ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சோனக் மற்றும் ஜிதேந்திர ஜெயின் அடங்கிய அமர்வு, ‘கேளிக்கை கட்டணம் வசூலிக்கத் தடை விதிப்பதற்கு, மாநில அரசின் கேளிக்கை வரிச் சட்டத்தின் கீழ் எந்தவித சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை; எனவே ஏற்கனவே மாநில அரசு பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்கிறோம். மேலும், மாநில அரசு பிறப்பித்த இந்தத் தடை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் வர்த்தகம் மற்றும் தொழில் செய்யும் உரிமையை மீறுவதாகும். ஆன்லைனில் முன்பதிவு செய்வதா அல்லது திரையரங்கிற்கு நேரடியாகச் சென்று டிக்கெட் வாங்குவதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது’ என்று தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், மகாராஷ்டிராவில் இனிமேல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்கு கேளிக்கை கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement