தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் 10 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

இம்பால்: இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 10 செயற்கைக்கோள் மூலமாக நாட்டின் எல்லைகள் கண்காணிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியா ஒரு துடிப்புமிக்க விண்வெளி சக்தியாக மாறி வருகின்றது. 2040ம் ஆண்டுக்குள் இந்தியா அதன் விண்வெளி நிலையத்தை கொண்டு இருக்கும். இன்று 34 நாடுகளில் இருந்து 433 செயற்கைக்கோள் இந்தியாவில் இருந்து ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன. இன்று நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நோக்கத்திற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவை நாட்டின் எல்லைகளை, கடல் பகுதியை கண்காணித்து வருகின்றன.

காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாட்டை படிப்பதற்கு வானிலையை கண்காணிப்பதற்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஜி20 நாடுகளுக்காக ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

செயற்கைக் கோள் ஏவுதலை பார்வையிடும் எம்பிக்கள் குழு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 18ம் தேதி இந்தியா பூமி கண்காணிப்பு தொடர்பான இஓஎஸ்-09 என்ற செயற்கைக்கோளை ஏவவுள்ளது. இது அனைத்து வானிலை நிலைகளிலும் விண்வெளியில் இருந்து அதன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எம்பிக்கள் குழு இந்த செயற்கைக்கோள் ஏவுதலை காண்பதற்கு திட்டமிட்டுள்ளது.