தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு..!!

சென்னை: எண்ணூர் பெரியகுப்பம் கடல் பகுதியில் 4 பெண்களின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த 4 பெண்களும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள். பவானி(19), தேவகி, செல்வம் மற்றும் கல்லூரி மாணவி சாந்தினி. இதில் கல்லூரி மாணவி தவிர மற்ற 3 பேரும் கும்மிடிப்பூண்டி பகுதியில் துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர். பெரியகுப்பம் கடற்பகுதி ஆழமில்லாத பகுதி ஆகும். இடுப்பு அளவே நின்று குளிக்கும் அளவிற்கு தரைப்பகுதியாக இருந்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஒரு பெண் கடலில் குளித்து கொண்டிருக்கும் பொழுது மூச்சு திணறி அலையில் சிக்கி உள்ளார். கரையில் இருந்த அடுத்தடுத்த 3 பெண்களும் அந்த பெண்ணை காப்பாற்ற சென்ற போது ஒருவருக்கொருவராக அலையில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதி அருகே உள்ள மீனவர்கள் சடலத்தை பார்த்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement