தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எண்ணூர் - கோசஸ்தலையார் ஆற்றில் கட்டிடக் கழிவு மற்றும் திடக்கழிவுகள் கொட்டப்படுவது வேதனை அளிக்கிறது. இந்தச் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கும் கடலோரக் கட்டுப்பாடு பகுதி (CRZ) விதிகளை நேரடி மீறும் வரம்பு மீறும் நடவடிக்கையாகும்.

Advertisement

எண்ணூர் ஆற்றில் சட்டவிரோதமாகக் கழிவு மற்றும் கட்டிடக் குப்பைகள் கொட்டப்படுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே தொழிற்துறை மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கும் எண்ணூரில் புதிய கழிவு கொட்டுதல், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும், உள்ளூர் மக்களின் ஆரோக்கியத்துக்கும் நேரடி அச்சுறுத்தலாக உள்ளது.உள்ளூர் மக்களின் பல முறை புகார்களுக்கும் பிறகும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. அரசு உடனடியாக அனைத்துக் கழிவு கொட்டும் செயல்பாடுகளையும் நிறுத்த வேண்டும்.

மேலும் மாசுபாட்டுக்குக் காரணமான நிறுவனங்களுக்கும் பொறுப்புடைய அதிகாரிகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூர் ஆற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் சார்ந்த பிரச்சினை என்பதை அரசு உணர்ந்து உடனடி, தீவிர பரிகார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement