தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

38 நாட்களுக்கு பின்னர் இங்கிலாந்து போர் விமானம் புறப்பட்டு சென்றது

திருவனந்தபுரம்: எரிபொருள் குறைவு மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டு போர் விமானம் 38 நாட்களுக்குப் பின்னர் நேற்று காலை சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. கடந்த மாதம் 14ம் தேதி இந்திய பசிபிக் கடலில் விமானம் தாங்கி கப்பலில் இருந்து பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டின் எப்35 பி ரக போர் விமானத்தால் மோசமான காலநிலை காரணமாக மீண்டும் கப்பலில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
Advertisement

நீண்ட நேரம் வட்டமிட்டு பறந்ததால் எரிபொருள் குறைந்ததை தொடர்ந்து அந்த விமானம் அன்று இரவு அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கும் போது விமானத்தில் ஹைட்ராலிக் செயல்பாட்டிலும், ஆக்சிலரி பவர் யூனிட்டிலும் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் தாங்கி கப்பலில் இருந்த 2 இன்ஜினியர்கள் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரத்திற்கு வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் பழுது பார்க்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த 6ம் தேதி இங்கிலாந்தில் இருந்து 14 இன்ஜினியர்கள் அடங்கிய ஒரு குழுவினர் திருவனந்தபுரத்திற்கு வந்து விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 2 வாரங்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டது. தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது வெற்றிகரமானதை தொடர்ந்து நேற்று காலை 10.45 மணியளவில் இந்த விமானம் ஆஸ்திரேலியா வழியாக இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.

Advertisement

Related News