பொறியியல் மாணவர் சேர்க்கை இரண்டாவது சுற்று கலந்தாய்வு துவங்கியது
Advertisement
அவர்கள் வரிசைப்படி தங்களுக்குப் பிடித்தமான கல்லூரிகளை 28ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வுசெய்ய வேண்டும். 29ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை அவர்கள் 30ம் தேதி மாலை 5 மணிக்கு உறுதிபடுத்த வேண்டும். உறுதி படுத்திய பிறகு 31ம் தேதி காலை 10 மணிக்கு முன்பாக அவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
அதன்பின்னர் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவது, அசல் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது உள்ளிட்ட சேர்க்கை நடைமுறைகளை முடித்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும். இதைத்தொடர்ந்து, 3வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி முடிவடைகிறது.
Advertisement