பொறியியல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 869 மாணவர்களுக்கு ஒதுக்கீடு ஆணை
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 80 மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 37 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிரிவில் 8 மாணவர்களுக்குமாக மொத்தம் 125 பேருக்கு இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி பொதுப்பிரிவுகளை சேர்ந்த சிறப்பு பிரிவுக்கான (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள்) கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 322 மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்களில் பிரிவில் 414 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைகள் பிரிவில் 133 மாணவர்களுக்கும் என விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மொத்தம் 869 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை இன்று காலை வழங்கப்படுகிறது.