தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோத பணப் பரிமாற்றம்; சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: வழக்கு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த் ஜெயின். தொழிலதிபரான இவர், சென்னை புரசைவாக்கம் பிளவர் சாலை கிரீன் அவென்யூ பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் பகுதியில் பெரிய அளவில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளிநாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதி தொடர்பாக சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக வருமான வரித்துறை சோதனையின் போது குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையாக தொழிலதிபர் அரவிந்த் ஜெயினுக்கு சொந்தமான அம்பத்தூரில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனம், புரசைவாக்கத்தில் உள்ள வீடு, கே.கே.நகர், தி.நகரில் உள்ள அலுவலகம் என சென்னையில் 10 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.குறிப்பாக புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு 2 கார்களில் வந்த 8 அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். அதேபோல் மற்ற இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ே

மலும் இவரது மருந்து நிறுவனத்தின் கணக்கு விவரங்களை ஆடிட்டர் விஜயராகவன் என்பவர் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாம்பலத்தில் உள்ள ஆடிட்டர் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர். அனால் ஆடிட்டர் இறந்து ஓராண்டு ஆவதாகவும், தற்போது ஆடிட்டிங் பணிகள் எதுவும் நாங்கள் யாரும் செய்யவில்லை என வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஆடிட்டர் விஜயராகவன் வீட்டில் சோதனை நடத்தாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். தொழிலதிபருக்கு சொந்தமான 10 இடங்களில் நடந்த சோதனையில், வழக்கு தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர்.

Advertisement