முகப்பேர் குடிநீர் வாரிய ஆபீசில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் கடும் திணறல்
Advertisement
இதையடுத்து ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று குடிநீர் வாரிய சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில்,’’முகப்பேரில் உள்ள குடிநீர் வாரிய 7வது மண்டல அலுவலகம் முன் தனியார் டிராவல்ஸ் வேன்கள் வரிசையாக நிற்பதால் குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை குடிநீர் வாரிய அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வேன்கள் அப்புறப்படுத்தவில்லை. எனவே ஆக்கிரமித்துள்ள வேன்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.
Advertisement