தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முகப்பேர் குடிநீர் வாரிய ஆபீசில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் கடும் திணறல்

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் ஸ்கூல் சாலையில் குடிநீர்வாரியம் 7வது மண்டல அலுவலகம் உள்ளது. முகப்பேர், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் பிரச்னை சம்பந்தமாக அலுவலகத்தில் புகார் கொடுக்கவும் வீடுகளுக்கு புதியதாக குடிநீர் இணைப்பு கேட்டும் மனு கொடுக்க வருகின்றனர். கடந்த சில மாதங்களாக 7வது மண்டல குடிநீர்வாரியம் அலுவலகத்தை மறைத்து ஏராளமான தனியார் டிராவல்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதன்காரணமாக குடிநீர்வாரிய அலுவலகம் எங்கு உள்ளது என்று தெரியமால் புதிதாக வருகின்றவர்கள் தவிக்கின்றனர். மேலும் அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றி தவிக்கின்றனர். இதனால் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement

இதையடுத்து ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று குடிநீர் வாரிய சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில்,’’முகப்பேரில் உள்ள குடிநீர் வாரிய 7வது மண்டல அலுவலகம் முன் தனியார் டிராவல்ஸ் வேன்கள் வரிசையாக நிற்பதால் குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை குடிநீர் வாரிய அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வேன்கள் அப்புறப்படுத்தவில்லை. எனவே ஆக்கிரமித்துள்ள வேன்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

 

Advertisement

Related News