தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு; பரமக்குடியில் போஸ்டர்

பரமக்குடி: மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்கரவர்த்தி, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் நேற்று மனு அளித்தார். மனுவில், ‘‘வருகிற 11ம் தேதி சுதந்திர போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு நாள். இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் குறித்து தேவேந்திர குல வேளாளர் மக்களின் எண்ணத்திற்கு எதிராக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 60 ஆண்டுகளாக நடந்து வரும் குருபூஜைக்கு இதுவரை அதிமுக தலைமை மரியாதை செலுத்த வந்ததில்லை.

Advertisement

இதனால் தலைமையின் மீது ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில், அவரது கருத்து மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. எனவே எடப்பாடி உள்பட அதிமுகவை சேர்ந்த எந்த நிர்வாகிகளையும் நினைவிடத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக சார்பில் நினைவிடத்திற்கு யாரும் வரும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதற்கு தேவேந்திரர் பண்பாட்டுக் கழக நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, செப். 11 நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வரும் அதிமுகவினரை அனுமதிக்கமாட்டோம் என பரமக்குடி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு நிலவுகிறது.

Advertisement

Related News