தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

Advertisement

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 100வது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக நடத்தப்படும். மேலும், ரூ.3 கோடி மதிப்பீட்டில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலையுடன் மணி மண்டபம் கட்டப்படும் என, கடந்தாண்டு இமானுவேல் சேகரனின் நினைவுநாளான செப். 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து மணி மண்டபம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று, முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் இமானுவேல் சேகரனின் 100வது பிறந்தநாள், அரசு விழாவாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ரூ.52 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், தமிழரசி, சண்முகையா, எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement