இமானுவேல் சேகரன் மணிமண்டப பணிகள் டிசம்பரில் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Advertisement
மணிமண்டபம் என்பது பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என கருதி தமிழக முதல்வர் அனைத்து மணிமண்டபங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பல்நோக்கு அரங்கு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டத்தில் 500 பேர் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 150 நபர்கள் அமர்ந்து உணவு உண்பதற்கான உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement