தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமானுவேல் சேகரன் மணிமண்டப பணிகள் டிசம்பரில் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் மக்களுக்காக உழைத்தவர்களுக்கும், சுதந்திரத்திற்காக போராடியவர்களுக்கும் மணி மண்டபம் கட்டுவதோடு, அரசு விழா என அவர்களுக்கு மரியாதை கொடுத்து வருகிறார். அதுபோல் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு ரூ.3 கோடி செலவில் 8,460 சதுர அடியில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தியுள்ளேன்.
Advertisement

மணிமண்டபம் என்பது பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என கருதி தமிழக முதல்வர் அனைத்து மணிமண்டபங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பல்நோக்கு அரங்கு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டத்தில் 500 பேர் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 150 நபர்கள் அமர்ந்து உணவு உண்பதற்கான உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement

Related News