தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமெயில் மூலம் சினிமா இயக்குநர் மணிரத்னம் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: காவல்துறை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் சினிமா இயக்குநர் மணிரத்னம், நடிகை திரிஷா, நடிகர் விஷால் ஆகியோர் வீடுகள் மற்றும் சிபிஐ அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சினிமா இயக்குநர் மணிரத்னம், நடிகை திரிஷா, நடிகர் விஷால் வீடுகள் மற்றும் சிபிஐ அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதை யடுத்து தேனாம்பேட்டை போலீசார் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மணிரத்னம் வீடு, செனடாப் சாலையில் உள்ள திரிஷா வீடுகளில் சோதனை நடத்தினர். இது வெறும் புரளி என தெரியவந்தது. இதேபோல் அண்ணா நகர் போலீசார் விஷால் வீட்டில் சோதனை நடத்தினர். பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

அதுவும் புரளி என தெரிந்தது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை மற்றும் அண்ணாநகர், சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் உதவியுடன் டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News