வானிலை ஆய்வு மையம், ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு இமெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
Advertisement
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. ஜிஎஸ்டி அலுவலகம், சென்னை வானிலை ஆய்வு மையத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நுங்கம்பாக்கம் போலீசார் மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் உதவியுடன் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் சென்னை வனிலை ஆய்வு மையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் இது ெவறும் புரளி என தெரியவந்தது. வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் உதவியுடன் தேடி வருகின்றனர்.
Advertisement