தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முறையான பராமரிப்பு இல்லாததால் எலியார்பத்தி டோல்கேட்டில் கட்டண உயர்வு கிடையாது: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி

Advertisement

திருமங்கலம்: மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால், எலியார்பத்தி டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரை நான்கு வழிச்சாலை செல்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 54 டோல்கேட்டுகளில், குறிப்பிட்டவற்றுக்கு ஒரு தேதி, மற்றவைக்கு வேறு தேதி என ஆண்டுதோறும் இரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதில் செப்டம்பர் 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்படுவதில் எலியார் பத்தி டோல்கேட்டும் ஒன்று. இதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன்படி எலியார்பத்தி டோல்கேட்டிலும் கட்டண உயர்வு இருக்கும் என நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே, மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை முறையான பராமரிப்பின்றி பல இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனோட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு உருவானது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எலியார் பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை அதிரடியாக நிறுத்தி வைத்தனர். இதனால் இந்த டோல்கேட்டில் பழைய கட்டணமே தொடரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் வரவேற்றுள்ளனர்.

Advertisement

Related News