நெகிழி பயன்பாட்டை ஒழித்து மீண்டும் மஞ்சப்பை விருது சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி வளாகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழித்து, சூழலுக்கு தகுந்த பொருட்களின் பயன்பாட்டினை முன்னிறுத்திய சிறுவளூர் அரசு உயர் நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடம் பிடித்து, 2025ஆம் ஆண்டிற்கான மீண்டும் மஞ்சப்பை விருது பெற்றதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரத்தினசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனம் மற்றும் காதி துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமையில் 9.9.2025 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி வளாகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டினை வெற்றிகரமாக ஒழித்து, சூழலுக்கு தகுந்த பொருட்களின் பயன்பாட்டினை முன்னிறுத்திய சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் இரண்டாமிடம் பெற்றமைக்காக 2025-ஆம் ஆண்டிற்கான மீண்டும் மஞ்சப்பை விருது மற்றும் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை விருது வழங்கப்பட்டுள்ள சிறுவளுர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, சந்தித்து விருதை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பாலசுப்ரமணியன், ஆசிரியர்கள் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.