தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தெப்பக்காடு முகாமில் 50 ஆண்டுகள் நண்பர்களாக வாழும் பாமா, காமாட்சி யானைகள்

 

ஊட்டி: தெப்பக்காடு யானைகள் முகாமில் பாமா மற்றும் காமாட்சி என்ற இரு யானைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இணை பிரியாமல் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் 75 மதிக்கத்தக்க பாமா என்ற யானையும், 65 வயது மதிக்கத்தக்க காமாட்சி என்ற யானையும் உள்ளன. முகாமில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த 2 யானைகளும் வாழ்ந்து வருகின்றன. பாமா மற்றும் காமாட்சி எப்போதுமே இணை பிரியாமல் ஒன்றாக சுற்றித்திரிவது வாடிக்கை. அனைத்து பணிகளிலும் இருந்து இவைகள் ஓய்வுபெற்றபோதிலும், தற்போதும் மேய்ச்சலுக்கு செல்லும்போதும், உணவிற்காக செல்லும்போதும் இரண்டும் ஒன்றாகவே செல்லும்.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் முகாமில் யானைகளுக்கு கரும்பு, சத்துள்ள உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. இதனை உட்கொள்ள 2 யானைகளும் ஒன்றாகவே செல்கின்றன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாமா மற்றும் காமாட்சி யானைகள் வாழ்ந்து வருகின்றன. பல்வேறு பணிகள் மேற்கொண்ட இந்த யானைகள் தற்போது ஓய்வு எடுத்து வருகின்றன. வயது மூப்பின் காரணமாக வெகுதூரம் செல்ல முடியாத இந்த யானைகள் தற்போது முகாம் அருகில் உள்ள மாயார் ஆற்றில் குளிப்பது, அங்குள்ள காடுகளில் மேச்சலில் ஈடுபடுவது, பின் முகாமில் உள்ள உணவு வழங்கும் பகுதிக்கு வந்து உணவு அருந்தி செல்வது போன்றவற்றை மட்டுமே மேற்கொள்கின்றன. ஆனால், 2 யானைகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும்’’ என்றனர்.

Related News