தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேன்கனிக்கோட்டை அருகே காலிபிளவர், நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்

*விவசாயிகள் கவலை

Advertisement

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, ஒன்னுகுறுக்கை கிராமத்தில் நெற்பயிர், காலிபிளவர், தக்காளி தோட்டங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்கதையாக உள்ளது. தினமும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து தக்காளி, முட்டைகோஸ், நெற்பயிர், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன.

இந்நிலையில், கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சி ஒன்னுகுறுக்கை கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு 5 யானைகள் கூட்டம் வெங்கடபதி என்பவர் கேரட் தோட்டம் மற்றும் நெல்வயலில் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. அதேபோல், துரைசாமி என்பவரது காலிபிளவர் தோட்டம் மற்றும் ராமப்பா என்பவரது நெல் வயல், சந்திரேசேகர் என்பவரது ரோஜா தோட்டம் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தின.

அதேபோல், பெட்டமுகிலாளம் கிராமத்தில் நெற்பயிர், தக்காளி தோட்டத்தை நாசம் செய்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு, பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனத்துறை சார்பில் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே இழப்பீடு கொடுக்கிறார்கள். அதுவும் வருடக்கணக்கில் காத்து கிடக்க வேண்டும். இதற்கு அரசு நிரந்தர தீர்வு காணும் வரை, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Related News