தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வால்பாறை அக்காமலை எஸ்டேட்டில் வீடுகளை உடைத்து சூறையாடிய யானைகள்

*மக்கள் அச்சம்

Advertisement

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை மலை தொடர் வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, புலி,காட்டுமாடு, செந்நாய், கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வால்பாறை அடுத்துள்ள அக்காமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் உணவு தேடி 2 காட்டு யானைகள் நுழைந்தன. அவை இரண்டு வீடுகளின் கதவுகள், ஜன்னல் மற்றும் பொருட்களை உடைத்து சூறையாடியது. சுதாரித்து கொண்ட பெண்கள், குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புக்காக வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பாக அருகில் வசிப்பவர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், ஆங்காங்கே தீயிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் சற்று நேரம் அங்கும் இங்குமாக உலா வந்து பின்னர் மெதுவாக வனப்பகுதி நோக்கி சென்றன. காட்டு யானை அட்டகாசத்தால் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களை வனத்துறை கணக்கெடுத்து சென்றனர்.மேலும் அப்பகுதியில் மக்கள் பாதுகாப்புக்காக இரவு ரோந்து அதிகரிக்கப்படும் என வனத்துறை தெரிவித்தனர்.

Advertisement

Related News