தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யானை வழித்தடங்களை பிப்ரவரிக்குள் அரசு அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பு வெளியிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யானைகள் வழித்தடங்களை கண்டறிய குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல, யானைகள் வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாக கால அட்டவணையையும் அரசு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது, அரசின் கால அட்டவணைப்படி யானைகள் வழித்தடம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அட்டவணைப்படி, நவம்பர், டிசம்பர் மாதங்களில் யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அட்டவணைப்படி பிப்ரவரி மாதத்திற்குள் இறுதி அறிக்கையை வெளியிடா விட்டால், அரசு நியமித்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் யானைகள் வழித்தடங்களை நீதிமன்றமே அறிவிக்கும் என்று தெரிவித்து விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement

Related News