தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீண்டும் மீண்டும் கூட்டத்தை பிரிந்து கிராமங்களில் சுற்றித்திரியும் குட்டி யானை: தேன்கனிக்கோட்டையில் ராகியை நாசம் செய்தது

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் கூட்டத்தை பிரிந்த குட்டி யானை கிராமத்திற்குள் புகுந்து ராகி பயிரை நாசம் செய்தது. அதனை காட்டிற்குள் வனத்துறையினர் விரட்டினர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 5காட்டு யானைகள் உள்ளன. யானைகள் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, லக்கசந்திரம், மாரசந்திரம், தாவரகரை, அயன்பூரிதொட்டி, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை, நெல் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

Advertisement

இதனிடையே கூட்டத்திலிருந்து பிரிந்த 4 வயது குட்டி யானை ஒன்று மாரசந்திரம் கிராமத்தில் தனியார் பள்ளி அருகே 2 நாட்களுக்கு முன்பு சுற்றி திரிந்தது. இதைஅறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் குட்டி யானையை காட்டிற்குள் விரட்டி யானை கூட்டத்தில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று குட்டி யானை மீண்டும் மாரசந்திரம் கிராமத்திற்கு வந்து ராகி வயலில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் தடி, கம்புகளுடன் குட்டியானையை விரட்டிச்சென்றனர். அப்போது குடியிருப்பு பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு காட்டிற்குள் விரட்டினர். தொடர்ந்து குட்டி யானையை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement

Related News