தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் வள்ளியை யானை விரட்டும் காட்சி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

Advertisement

நாகை: நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 21ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு தங்க ஆட்டு கிடா வாகனத்தில் சிங்காரவேலவர் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. சிங்காரவேலவர் - தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு நடந்தது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து சிங்காரவேலவர் - தெய்வானையை மலர் அலங்காரத்தில் ஊர்வலமாக திருக்கல்யாண மண்டபத்துக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து சீர்வரிசை எடுத்தல் நிகழ்ச்சி, மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிங்காரவேலவர் - தெய்வானை திருமண வைபவம் நடந்தது. இதன்பின் வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. வள்ளியும், முருகனும் ஒருவருக்கு ஒருவர் விரும்பிய நிலையில் முருகன் நாரதரை தூது அனுப்புகிறார்.

பின்னர் முருகன் கிழவன் வேடத்துடன் சென்று வள்ளியிடம் திருமண செய்து கொள்ளுமாறு கேட்கிறார். அதற்கு நான் முருகனை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று வள்ளி கூறி விடுகிறார். இதையடுத்து தனது சகோதரர் பிள்ளையாரை யானை வேடத்தில் வள்ளியை மிரட்ட கூறுகிறார். அதன்படி விநாயகர் யானை வேடத்தில் வள்ளியை துரத்துகிறார். அப்போது பயந்துபோன வள்ளி தன்னை காப்பாற்றுமாறு கிழவன் வேடத்தில் இருந்த முருகனை கட்டி பிடித்து கொள்கிறார். அப்போது முருகன் கிழவன் வேடத்தை கலைத்து வள்ளிக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொள்கிறார். இது தத்ரூபமாக ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி நேற்றிரவு சிக்கல் கீழவீதியில் வள்ளியை யானை விரட்டு காட்சி நடத்தப்பட்டது. பின்னர் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் முருகன் - வள்ளி திருமணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News